TNPSC பொதுத்தமிழ் | கடற்பயணம் - General Tamil Study Material - Tn Results By

tn results and books,gov job,all

Recent Posts


Thursday, 25 April 2019

TNPSC பொதுத்தமிழ் | கடற்பயணம் - General Tamil Study Material

டிஎன்பிஎஸ்சி பொதுத்தமிழ் |கடற்பயணம்


        திரைகடல் ஓடியும் திரவியம் தேடு எனக் கூறியவர் ஒளவையார்
·         யாதும் ஊரே யாவரும் கேளிர் எனக் கூறியவர் கணியன் பூங்குன்றன்
·         தமிழர் பிற நாடுகளுக்குக் கடற்பயணம் மேற்கொண்ட செய்தி முந்நீர் வழக்கம் எனத் தொல்காப்பியத்தில் குறிக்கப்பட்டுள்ளது. 

·         பழந்தமிழர் பொருளீட்டுதலைத் தம் கடமையாகக் கருதினர். இதனைத் தொல்காப்பியப் பொருளதிகாரத்தில் இடம்பெற்றுள்ள பொருள்வயிற் பிரிவு விளக்குகிறது. பொருள்வயிற் பிரிவுகாலில் (தரைவழிப்பிரிதல்) பிரிவுகலத்தில் (நீர்வழிப் பிரிதல்) பிரிவு என இருவகைப்படும்.
·         ஏலமும் இலவங்கமும் இஞ்சியும் மிளகும் மேற்காசிய நாடுகளில் நல்ல விலைக்கு விற்கப்பட்டன.
·         தமிழ்நாட்டில்பிற நாட்டார் உள்ளத்தைக் கவர்ந்த  பொருள்கள் முத்தும் பவளமும் ஆரமும் அகிலும் வெண்துகிலும் சங்கும் ஆகும்.
·         பழந்தமிழர்கிரேக்கரையும் உரோமானியரையும் யவனர் என அழைத்தனர்.
·         ஒவ்வொரு பெரிய கப்பலும் மதில்சூழ்ந்த கோட்டைபோலத் தோன்றுமாம். அஃதாவதுநான்கு பக்கமும் நீர் நிரம்பிய கழனிகள். அதன் நடுவில் தனியாக மதிலோடு கூடிய மருதநில அரசனது கோட்டை. அக்கோட்டையின் தோற்றமானது, நடுக்கடலில் செல்லும் கப்பலுக்கு உவமையாகப் புறநானூற்றில் கூறப்பட்டுள்ளது.

கடலைக் குறிக்கும் தமிழ்ச்சொற்கள்:
ஆழிஆர்கலிமுந்நீர்வாரணம்பௌவம்பரவை,புணரி

மரக்கலத்தைக் குறிக்கும் தமிழ்ச்சொற்கள் :
·         கப்பல்கலம்கட்டுமரம்நாவாய்படகுபரிசில்புணை,தோணிதெப்பம்திமில்அம்பிவங்கம்மிதவைபஃறிஓடம்
·         ஒவ்வொரு பெயரும் ஒவ்வொரு வகையான கலத்தைக் குறிக்கும்.
·         கடலில் செல்லும் பெரிய கலம் நாவாய் எனப்படும்.
·         புகார் நகரத்தில் நிறுத்தப்பட்ட நாவாய்கள்அலைகளால் அலைப்புண்டு கட்டுத்தறியில் கட்டப்பட்ட யானை அசைவதுபோல் அசைந்தன. அவற்றின் உச்சியில் கொடிகள் அசைந்து ஆடின எனப் பட்டினப்பாலை கூறுகின்றது.
·         பெரிய நாவாய்கள் காற்றின் துணைகொண்டே இயங்கின. அவை பாய்மரக் கப்பல்கள் எனப்பட்டன. கரிகாலனின் முன்னோர் காற்றின் போக்கை அறிந்து கலம் செலுத்தினர் என்பதனைப் புறநானூற்றுப் பாடல் கூறுகிறது.
·         காவிரிப்பூம்பட்டினம்முசிறிகொற்கை ஆகியவை குறிப்பிடத்தக்க துறைமுகங்கள்
·         முசிறிசேர மன்னர்க்குரிய துறைமுகம்.
·         யவனர்கள்பொன்னைச் சுமந்து வந்துஅதற்கு ஈடாக மிளகை ஏற்றிச் சென்றார்கள். இச்செய்தியை, அகநானூறு தெரிவிக்கிறது.
·         பாண்டிய நாட்டு வளத்தைப் பெருக்கியது கொற்கைத் துறைமுகம். இத்துறைமுகத்தில் முத்துக்குளித்தல் மிகச் சிறப்பாக நடந்ததனை வெனிசு நாட்டறிஞர் மார்க்கோபோலோகுறித்துள்ளார்.
·         ஏற்றுமதிப்பொருள்களில் முத்தே முதலிடம் பெற்றது. மதுரைக்காஞ்சியும் சிறுபாணாற்றுப்படையும் கொற்கை முத்தைச் சிறப்பிக்கின்றன. 

·         விளைந்து முதிர்ந்த விழுமுத்து என மதுரைக்காஞ்சி கூறும்.
·         கடற்கரையை அடுத்து இருக்கும் ஊர்களைப் பட்டினம்பாக்கம் என்றழைப்பர்.
·         அவ்வூர்களில் பெரும்பாலும் வணிகர்களே வாழ்ந்து வந்தார்கள். 
·         சோழநாட்டின் துறைமுகமாகிய காவிரிப்பூம்பட்டினத்தில் (பூம்புகார்)சுங்கச்சாலையும் கலங்கரை விளக்கமும் இருந்தன.
·         பழந்தமிழகத்தின் வாணிகப்பொருள்களைப் பற்றிய குறிப்புகள் பட்டினப்பாலையிலும் மதுரைக்காஞ்சியிலும் காணப்படுகின்றன.
·         இங்கிருந்து ஏற்றுமதியான பொருள்களுள் இரத்தினம்முத்து,வைரம்மிளகுகருங்காலிகருமருதுதேக்குசந்தனம்,வெண்துகில்அரிசிஏலக்காய்இலவங்கப்பட்டைஇஞ்சி முதலியன குறிப்பிடத்தக்கவை.

·         தமிழகப் பொருள்கள் சீனத்தில் விற்கப்பட்டன. சீனத்துப் பட்டும் சருக்கரையும் தமிழகத்துக்கு இறக்குமதி ஆயின.

    Click and Download pdf file

No comments:

Post a Comment